ஜி.எஸ்.டி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் புதிய வரி குறித்த விவரங்களை பொதுமக்கள்
தெரிந்து கொள்ளலாம்.*
ஜி.எஸ்.டி
எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும்
அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு
வருகின்றது.
ஜூலை, 1ல்,
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலாகிறது. அதற்கு முன், அனைத்து
மாநிலங்களும், ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.
பல மாநிலங்கள், அதை நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக சட்டசபையிலும் நேற்று
முன் தினம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக,
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் பொருட்களுக்கு
விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கு கவுன்சில் ஒன்று
அமைக்கப்பட்டது. இதில், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு
அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், 5, 12, 14, 28
சதவீதம் என, நான்கு வித வரிகள் உள்ளன.
இந்த
குழு பல்வேறு கட்டங்களாக கூடி ஜி.எஸ்.டியில் பொருட்களுக்கான வரி விதிப்பை
இறுதி செய்து வருகிறது. முன்னதாக ஜி.எஸ்.டி கவுன்சிலின் 17-வது கூட்டம்
புதுடெல்லியில் நேற்று முன் தினம் நடைபெற்றது. கிட்டத் தட்ட பெரும்பாலான
பொருட்களுக்கான வரி இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.gstcouncil.gov.in அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் புதிய வரி குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜி.எஸ்.டி
கவுன்சிலின் கூடுதல் செயலாளராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்
நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல் தனது டுவிட்டர்
பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
No comments