1.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவகம்,
ஒன்பது மாதங்களில் பிரமாண்டமாகவும், பாரம்பர்யத்தைப் பறைசாற்றும்
வகையிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
2.நாட்டின்
ஒருமைப்பட்டை வலியுறுத்தும் வகையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல், கலாம் நினைவகப் பணிகளுக்கு
பயன்படுத்தப்பட்டுள்ளது.
3.50
சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த நினைவிடத்தின்
நுழைவுவாயிலானது, பிரிட்டிஷார் அமைத்த 'இந்தியா கேட்' போல்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
4.இதன் தரைதளம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட உயர் ரக கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
5.நினைவு
மண்டபத்தின் வெளிப்பகுதி முழுவதும் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட
மஞ்சள் கிரானைட் மற்றும் ஆக்ரா சிவப்பு கிரானைட் கற்களால்
பதிக்கப்பட்டுள்ளது.
6.கடற்கரைப்
பகுதி என்பதால் உப்புக் காற்றினால் நினைவிடம் பாதிக்கப்படாமல் இருக்க,
வழக்கத்தைவிட பல மடங்கு கூடுதலான கன அளவு கொண்ட கற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
7.நினைவு
மண்டபத்தின் உள்ளே அமைந்துள்ள நான்கு அரங்குகளில் கலாமின் வாழ்க்கையைச்
சித்தரிக்கும் ஓவியக் காட்சிகளும், வரையப்பட்ட படங்களும்
வைக்கப்பட்டுள்ளன.
8.இவை முழுக்கமுழுக்க காய்கறிகள் மற்றும் மூலிகைச் சாறினைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.
9.கலாமின்
உடல் வைக்கப்பட்டுள்ள பிரதான கூடத்தின் மேல் ஜனாதிபதி மாளிகையை
நினைவுகூரும்வகையில் 12 மீட்டர் உயரத்தில் 9.62 மீட்டர் விட்டம் கொண்ட
மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
11.இதன்மேல்
தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. நினைவகத்தின் மேற்பரப்பில்
ராஜஸ்தான் மாநிலத்தின் ஷெகவாட்டி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
12.நினைவகத்தைச்
சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள், கோள்கள், அறிவு மரம், ஒற்றுமையை
எடுத்துக்காட்டும் பொம்மைகள் வைக்கப்பட்டிருப்பதுடன், ராஜமுந்திரியில்
இருந்து கொண்டுவரப்பட்ட செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன.
13.இவற்றுக்கு
முத்தாய்ப்பாக கலாமின் வெண்கலச்சிலை அருகே அவரால் கண்டுபிடிக்கப்பட்ட
அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல கோடி
ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள
14.கலாம் நினைவிட நுழைவு வாயிலை காரைக்குடி செட்டிநாட்டில் செய்யப்பட்ட மலேசிய தேக்குமரக் கதவுகள் அலங்கரிக்கின்றன.
15.தான்
வாழும்போது இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம்.
மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கும் அவரின் நினைவிடத்தில், கலாமின்
பணிகளைத் தொடரும்வகையில் கோளரங்கம், நூலகம், அறிவுசார் மையம் என பல மைங்கள்
தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments